Monday, June 17, 2013

முப்பூவின் பெயர்கள்:

முப்பூவின் பெயர்கள் :இதை சித்தர்கள்,ஞானிகள் பல வித பரிபாசைகளில் சரமாரியாக எழுதியுள்ளனர்.அளவில்லாப் பெயர்களிட்டு வாசகர்களுக்கு மூளையைக் குழப்பும்  நிலையில் இப்பொருளைச் சொல்லியுள்ளனர்.அவற்றில் சிலபெயர்கள் பின் வருமாறு ;
1.சல்லிவேர், 2.ஏகமூலி,
3.உவருப்பு,
4.வழலை,
5.அண்டம்,
6.பிண்டம்,
7.ஆதி அந்தம்,
8.மதிரவி,
9.கோஜபீஜம்,
10.ரோமம்,
11.சவர்க்காரம்,
12.ஏரண்டம்,
13.பேரண்டம்,
14.சிப்பி,
15.நத்தை,
16.கும்பிடுக்கல்,
17.யானைக்கல்,
18.பச்சை,
19.மலம்,
20.அமுரி, 21.நாதம்,
22.விந்து,
23.தலைபிண்டம்,
24.சக்திஉப்பு,
25.சிவ உப்பு,
26.கோரை,
27.கிளிஞ்சி, 28.மகாமகரப்பூ,
29.கன்னி,
30.பழச்சாறு,
31.திகைப்பூடு,
32.இந்திரகோபம்,
33.கருங்கோழி,
34.ஜோதி,
35.சுரோணிதம்,
36.திகைபூச்சி,
37.கல்லுப்பு,
38.குருவண்டு,
39.பூநீறு ,
40.பனிக்குடநீர்,
41.கரிஉப்பு,என்பதாம்.      

Sunday, June 16, 2013

ஆண்ட்டிமணி யின் உண்மை கந்தகம் தயாரித்தல்

ஆண்ட்டிமணி யின்  உண்மை  கந்தகம் தயாரித்தல்:


 சுத்திசெய்யபடாத  ஆண்ட்டிமணியை எடுத்து பொடித்து அதை தட்டையான கண்ணாடி பாத்திரத்தில் போடவும்;ஞானிகளின் கல்லில்லிருந்து பெறப்பட்ட அதன் சொந்த உப்பும்,புளிப்பு திரவமும் சேர்த்து வைக்கப்பட்ட காடியை ஊற்றவும்,இதனை இறுக மூடி நன்கு சிலை செய்து 40 நாட்கள் குதிரை சாணத்தில் புதைத்து வைக்கவும்,40 நாட்கள் சென்ற பின் எடுக்க ரத்தம் போன்று,சிவந்த திரவமாக இருக்கும்.அடியில் கல்  பொருளும் கலந்திருக்கும்.ரத்தம் போன்ற திரவத்தை மட்டும் பிரித்து வைக்கவும்,பின்பு பாத்திரத்தில் உள்ள பொருளுடன் புதிய காடியை (புளிப்பு திரவம் ) ஊற்றவும்.மறுபடியும் குதிரை சாணத்தில் புதைத்து 40 நாட்கள் கழித்து மறுபடியும் முன் போல் பிரிக்கவும்;இப்படி புளிப்பு திரவம் சிவப்பு நிறம் அடையாமல் இருக்கும் வரை இதனை திரும்ப, திரும்ப செய்யவும்.


இவ்வாறு  எடுக்கப்பட்ட ரத்த நிற திரவத்தை வடிகட்டவும்.பின் கண்ணாடி பாத்திரத்தில் உள்ள உப்புடன் ஊற்றி முன் போல் புதைக்கவும்,40 நாட்கள் வைக்கவும்.பின் எடுத்து பார்க்க கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.இதனை வாலையில் இட்டு மிதமான தீ யில் வடிக்கவும்.காடி முழுவதும் வெளிஏறிய பின் வாலையினுள் மெழுகு போன்ற சற்று இறுகிய பொருள் இருக்கும்.இதனை எடுத்து பொடிக்கவும் இதை சுத்தி செய்த மழை நீரில் கரைக்கவும்.இதனை குறைந்த வெப்ப நிலையில்  உலர்த்தவும்.அந்த பொடியை மூன்றடுக்கு வாலையில் இட்டு,உயர் சுத்தி செய்ய பட்ட ஸ்பிரிட் ஆப் ஒயின் (sprit of wine )பொடிக்கு 3 விரல் உயரம் இருக்குமாறு விட்டு (ஊற்றி )இருக மூடி இரண்டு மாதம் மிதமான வெப்ப நிலையில் வைக்கவும்.இரண்டு மாதம் பின் எடுக்க மாணிக்கம் போன்ற ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட காடி நீர் கிடைக்கும்.இதன் அடியில் கருப்பு நிறம் கொண்ட பொருள் இருக்கும்,இதனை தனியே பிரித்து வைக்கவும்.மாணிக்கம் போன்ற காடி நீரை வாலையில் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும் வடிக்கும் போது தங்க நிறம் தோன்றி மறையும்.வாலையில் சிவப்பு திரவம் வடியும்.இதனை  மூன்றடுக்கு வாலையில் 10இரவு 10பகல் மிதமான சூட்டில் வைக்க,முதலில் ஊற்றிய ஸ்ப்ரிட் ஆப் ஒயின் என்பது எண்ணையின் மீது மிதந்து கொண்டிருக்கும்.இவற்றை பிரித்து எண்ணையை தனியே எடுத்து வைக்கவும்.முதலில் எடுத்து கொள்ள பட்ட பொருள் சுத்தி செய்ய படாத ஆண்டிமணி கடைசியில் நமக்கு கிடைத்தது ஆண்ட்டிமனியின் எண்ணை (oil  of antimony ). இதுவே கல்லாக மாற்றப்பட வேண்டியது,மாற்றப்பட்ட கல்லுக்கு stone of fire என்று பெயர் .அந்த எண்ணை உயர்தரமான இனிப்பு சுவையை கொண்டிருக்கும்.இதற்கு  ஒப்பாக எதுவும் இல்லை.இந்த எண்ணை  தான் ஆண்டிமணியின் (ஞானிகளின்) கந்தகம்.









1.பவளத்தின் திரவத்தில் இந்த எண்ணை கலந்து கொடுக்கப்பட்டால் சொறி ,சிரங்கு ,குஷ்டம் ,தோல் நோய் கள்,ரத்த தோஷத்தால் வந்த அனைத்து தோல் நோய்களும் குணமாகும்.இதய சோர்வு நீங்கும்.இதய வால்வுகளை சீர் செய்கிறது.இதயம் பலப்படுகிறது.
2.முத்தின் திரவத்தில் கலந்து கொடுக்க ஞாபக சக்தி உயரும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

அண்டக்கல்லின் உப்பு தயாரிக்கும் முறை,

           ஆண்ட்டிமனியின்  உப்பு                                    (calcination of Antimony)  

ஆண்ட்டிமணியை வஸ்திரகாயம் செய்து தோசை கல்லில் இரண்டு விரல்கடை  உயரம் கொண்ட பாத்திரத்தில்    ஆண்ட்டிமணி மாவை போட்டு முதலில் லேசான தீயில் அய கரண்டியால் வறுத்து,  பின் தீயை உயர்த்தி வறுக்க  ஆண்ட்டிமணியானது உருகி சிறு சிறு கட்டிகளாக மாறும். fume (ஆவி,புகை ,நுரை ) வரும்போது கிண்டவும்.இந்த கட்டி களை மீண்டும் பொடித்து வறுக்கவும்.இது போல fume வராதவரையிலும்,கட்டிகளாக மாறாத வரையிலும்,வறுக்கவும், இதன் மூலம்  ஆண்ட்டிமனியின்  பொடியானது வெண்மையாகவும்,உயர்ந்த சாம்பல் போன்றும் கிடைத்தால் நமது செய்முறை சரியானதே.                         
BASIL VALENTINE(TRIUMPHAL CHARIOT OF ANTIMONY)


மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.


Saturday, June 15, 2013

நாகேஸ்வரம்

   நாகேஸ்வரம்    

  நாக பஸ்பம்                                            80 gm,                          சுத்தி செய்த லிங்கம்                          80 gm,                         சுத்தி செய்த மனோசிலை               20 gm,                  கெந்தகம் சுத்தி செய்தது                180 gm,    

         பழச்சாற்றால்  9 மணி நேரம் அரைத்து வில்லை செய்து நிழலில் உலர்த்தி அகலில் வைத்து மேலகல் மூடி சீலைமண்  கவசம் செய்து கெஜ புடம் வைத்தால் பஸ்பமாகும்.இதற்கு  நாகஸ்வரம் என்று பெயர். 

நாகேஸ்வர அனுபானம் :       

சூரிய  உதயத் திற்கு முன் பாக நாகேஸ்வரத்தை இரண்டு அரிசி  எடை வெற்றிலையில் மடித்து உட்கொண்டால் 100 மாதருடன் புணர்ச்சி  செய்தாலும்  விருப்பம்  தணியாமல்  விசேஷமாய்  காமவிருத்தி உண்டாகும்.


மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

Wednesday, June 12, 2013

அண்டக்கல்.


அண்டக்கல்                                                                           இந்த கல் வயோதிகர்களும், வாலிபர்களும் அறிந்த ஒன்றே, அற்பப் பொருள் ,இறையால் படைக்கப்பட்ட இப்பொருள் நாடு,நகரம், கிராமம் எங்கும் காணப்படும்.குழந்தைகள் எடுத்து விளையாடும் பொருள் .பணியாளர்கள்  இதை தெருவில் எறிவர். உலகில் விலை உயர்ந்த பொருள் .இது அற்பமாகவும், உதவாகரையான பொருளாகவும் அறிவற்றோரால்  கருதப்படுகிறது.இதை அறிந்தோன் சிரசின் மீது வைப்பான்.
இவைகளை  ஆய்வுக்கு பயன்படுத்த வேண்டாம் . 
1.முட்டை,                                                                                        2.மனிதமண்டையோடு,
3.ரோமம்,  
4.கண்ணீர்,
5.பிணத்தின்     உப்பு,  
6.சுக்கிலம்,
7.ஆண்,                                
8.பெண்,
9.கோசம் (ஆண் குறி அல்லது கருப்பை )
10.அஸ்தி,        
11.குருவண்டு                             
12.வஸ்து (சாராயம் ),           
13.மூத்திரம் ,        
14.குருதி ,           
15.கும்பிடும்  கல் சிப்பி , 
16.பலவகை உயிரினங்கள், 
17.மூலிகைகள், 
18.ரத்தினங்கள்,
19.மலை ,          
20.உவர்நீர்,
21.சுண்ண வகைகள்,             
22.உவர்மண்,  
23.சவுக்காரம்,         
24.வெடிஉப்பு,
25.கறி உப்பு ,                                                       
26.விசநீர், 
27.சூதம்,                                          
28.துருசு,
29.கருப்பை நீர் (குடநீர் ),                        
30.நெருப்பில் எரிந்து சாம்பல் ஆககுடிய பொருள்கள், 
31.மலம்,
32.தென்னை மரம்,
33.வாழைமரம் 
34.கடல்நீர்,                          
35.கடல் நுரை, 
36.கடலுக்குள் வளர்ந்த கல் உப்பு 
37.தலை பிண்டம், 
38.காளான் வகைகள் .
39.எலும்மிச்சம்  பழம் 
40.பல வகை விதைகள் 
போன்ற வற்றை  கொண்டு காய கல்ப மருந்து செய்வதை   தவிர்க்கவும்.



மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.